நடிகை நிதி அகர்வால் முன்னா மைக்கேல் படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து வந்த சவ்யசாச்சி படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதன் பிறகு சில தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் நடிகர் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த பூமி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
ஆனால் இந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் வெளியானது. எனவே, நடிகை நித்தி அகர்வாலுக்கு ஈஸ்வரன் முதல் படம். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடி வரும் நிதி அகர்வால் தற்போது சைமா விருது விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
நடிகை நிதி அகர்வால், கவர்ச்சியான உடையில் தொடைகளை காட்டியபடி, விழா மேடையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் தொடையா..? இல்லை மெழுகு சிலையா..? என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சமீபத்தில் நடிகை நித்தி அகர்வால் ஆணுறை மற்றும் மதுபானங்கள் அடங்கிய விளம்பரம் மூலம் பெரும் சர்ச்சையில் சிக்கினார். குறிப்பாக ஆணுறை விளம்பரத்தில் பெண்களுக்கான சில அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாகப் பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார். பணத்துக்காக இப்படி பேசுவார் என்று பலரும் திட்டினர்.
சர்ச்சைக்கு முன்பே மதுபான விளம்பரங்களில் நடித்து தனக்கென ஒரு பெயரைப் பெற்ற நடிகை நிதி அகர்வால், இதையெல்லாம் ஒதுக்கி வைத்து வாய்ப்புகளை வேட்டையாடுவதில் தீவிரமாக இருக்கிறார். தற்போது, விருது வழங்கும் விழாவில் அவர் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வலம் வருகின்றன.