தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சிரிக்கும் ராணி என்று அழைக்கப்படும் நடிகை சினேகாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை சினேகா அச்சமுண்டு, அச்சமுண்டு படத்தில் நடித்த நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நீண்ட நாட்களாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகை சினேகா, நடிகர் தனுஷுடன் வெளியான பட்டாஸ் படத்தில் தனுஷின் தந்தைக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதன் பிறகு படங்களில் நடிக்காத நிலாவுக்கு இப்போது இரண்டு குழந்தைகள். நடிகை சினேகா திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்று உடல் பருமனாக மாறினார்.
தற்போது அவர் உடல் எடையை குறைத்து மீண்டும் ஆரோக்கியமாக உள்ளார். இதனால் அவர் மீண்டும் சினிமாவுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது.
தமிழில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிகை சினேகா கதாநாயகியாக நடிக்க உள்ளார். மலையாளத்தில் மம்முட்டி நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சினேகா ஏற்கனவே இரண்டு படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.