தொடர்ந்து அம்மாக்கு டார்ச்சர் கொடுத்த அப்பா.. ஆத்திரத்தில் நண்பர்கள் உதவியுடன் மகன் செய்த கொடூரம்!!

58

மதுரை மாவட்டம் உறங்கான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவர் அதே பகுதியை சேர்ந்த சத்யா என்ற பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த இவர்களுக்கு 17 வயதில் மகன் உள்ளார். இதற்கிடையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக செல்லபாண்டி பிரிந்து ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

சத்யா தனது 17 வயது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். செல்லப்பாண்டி வேறு பெண்ணுடன் வசித்து வந்தாலும், அப்போது அவர் சத்யாவுக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த 17 வயது மகன், தனது நண்பருடன் சேர்ந்து தனது தந்தையை வீட்டின் அருகே கொடூரமாக வெட்டிக் கொன்றார். இந்த சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous article10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த விவசாயி மகள்.. அனைத்து பாடத்திலும் முழு மதிப்பெண் பெற்று சாதனை!!
Next articleதாயின் சடலத்துடன் 6 நாட்களாக வாழ்ந்து வந்த மகன்.. விசாரணையில் அதிர்ச்சி!!