ஒரே நேரத்தில் 2 காதலர்களுடன் குளியலறையில் ஆட்டம் போட்ட பெண் மருத்துவர்… அதிரடியாக அறைக்குள் புகுந்த கணவர்!!

63

ஒரே நேரத்தில் ஓட்டல் குளியலைறையில் இரண்டு காதலர்களுடன் இருந்த பெண் மருத்துவரை அவரது கணவர் அடித்து உதைத்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்சில் உள்ள ஒரு ஓட்டலில் பெண் மருத்துவர், தனது இரண்டு காதலர்களுடன் ஆட்சேபனைக்குரிய நிலையில், இருந்துள்ளார். அப்போது அவரது கணவரான மருத்துவர் அந்த ஓட்டலுக்கு வந்தவர், தனது மனைவி இரண்டு ஆண்களுடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவரது மனைவியையும், இரண்டு காதலர்களையும் அவர் அடித்து உதைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கணவன், மனைவி இருவரும் பயிற்சி மருத்துவர்களாக உள்ளனர். இதில் பெண் மருத்துவர் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிவதாக கூறப்படுகிறது. கடந்த 2013-ம் ஆண்டு இந்த மருத்துவ தம்பதியருக்கு திருமணம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர்களுக்குள் கருத்து ஏற்பாடு ஏற்பட்டது.

பெண் மருத்துவர், பல இளைஞர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக கணவரை பிரிந்து பெண் மருத்துவர் வாழ்ந்து வருகிறார். ஆனால், இருவரும் விவாகரத்து செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

தனது மனைவி மீதான சந்தேகத்தின் அடிப்படையில் ஓட்டலுக்கு வந்த போது அவர் இரண்டு ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்துள்ளார். இது தொடர்பாக தனது மனைவி, மற்றும் இரண்டு இளைஞர்கள் மீது அவர் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் புகார் பதிவு செய்யப்பட்டுளளது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ” தம்பதியர் பிரிந்து ஒரு வருடத்திற்கு மேலாகிறது. தனது மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரது கணவர் ஓட்டலுக்குச் சென்றுள்ளார். அங்கு குளியலறையில் தனது இரண்டு காதலர்களுடன் தன் மனைவி இருப்பதைப் பார்த்து அடித்து உதைத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் புகாரின் அடிப்படையில் விசாரித்து வருகிறோம்” என்றனர்.

Previous article`கிஃப்ட் தர்றேன் வா’ – இளம்பெண்ணின் கழுத்தை இறுக்கிய நைலான் கயிறு… `கொலை’யில் முடிந்த தகாத உறவு!!
Next articleதகாத உறவை துண்டித்ததால் பணம் கேட்டு மிரட்டிய காதலியை கொன்று புதைக்க முயன்ற காதலன்!!