இரண்டு பெண் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை!!

54

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே புள்ளகவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி வினோபாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் கோகுல் (30). இவர் அதே பகுதியை சேர்ந்த ஷில்பா (எ) சுகமதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு சஞ்சனா ஸ்ரீ (6), ரிஷ்மிகா (2) என்ற இரு மகள்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 15 நாட்களாக இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், வழக்கம்போல் கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதால், கோகுல் இன்று காலை வழக்கம்போல் வேலைக்குச் சென்றார்.

மன உளைச்சலில் வீட்டில் இருந்து வந்த சுகமதி, இரண்டு சிறுமிகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர் தேவூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த தேவூர் போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப பிரச்சனையால் சுகமதி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதூங்கிய நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மரணம்!!
Next articleகல்லூரி மாணவி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. சிறுவன் உள்பட இருவர் கைது!!