4 வயது சிறுவன் அடித்து கொலை கள்ளக்காதலால் விபரீதம்!!

69

திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருபவர் 28 வயது பார்த்தசாரதி. இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் இவருக்கும், சிவகங்கை மாவட்டத்தில் வசித்து வரும் 27 வயது திவ்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

திவ்யாவுக்கு திருமணமாகி 4 வயதில் பழனிவேல்ராஜன் என்ற குழந்தை இருந்தது. திவ்யாவும் கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். இருவரும் இன்ஸ்டா மூலம் பழக்கமாகி கள்ளக்காதலர்களாயினர்.

இதையடுத்து திவ்யா தனது 4 வயது மகனை எடுத்துக்கொண்டு பார்த்தசாரதியுடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இருவரும் தங்களை உண்மையான கணவன் – மனைவி என்று கூறிக்கொண்டு, திருப்பூர் மங்கலத்தை அடுத்த இச்சிப்பட்டி ஊராட்சி சிங்கப்பூர் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வந்தனர்.

மே 26ம் தேதி குழந்தை பழனிவேல்ராஜன் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாக கூறி கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர். அப்போது குழந்தையின் உடம்பில் பல்வேறு இடங்களில் காயம் இருந்ததால் அவர்கள் மீது மருத்துவர்களுக்கு சந்தேகம் வந்தது. உடனே மங்கலம் போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடையில் சிகிச்சை பலனின்றி குழந்தை பழனிவேல்ராஜன் உயிரிழந்தான். இதையடுத்து போலீசார் மருத்துவமனைக்கு வந்து பார்த்தசாரதியிடம் விசாரித்தனர். விசாரணையில் பார்த்தசாரதி கூறிய தகவல் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்தது.

அதாவது பகல் நேரத்தில் குழந்தையை வைத்துக்கொண்டே இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்தனர். சில நேரங்களில் குழந்தை அழுததால் அவர்களது உல்லாசத்திற்கு இடையூறாக இருந்தது. இதனால் திவ்யாவின் கள்ளக்காதலன் அந்த பிஞ்சுக்குழந்தையை அடித்து துன்புறுத்தினார்.

தினமும் குழந்தையை அடித்ததால் குழந்தையின் உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காயத்திற்கு அவர்கள் மருந்து கூட போடவில்லை. இதனால் குழந்தை வலி தாங்க முடியாமல் தினமும் தேம்பி தேம்பி அழுது கொண்டே இருந்துள்ளது.

சம்பவத்தன்று அவர்கள் உல்லாசம் அனுபவிக்கும் போது குழந்தை அழுததால் ஆத்திரம் அடைந்த கள்ளக்காதலன் அந்த குழந்தையை ஓங்கி அடித்ததில் குழந்தை கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டுவிட்டது.

பின்னர் இருவரும் குழந்தை கீழே விழுந்து விட்டதாக கூறி ஏமாற்றி மருத்துமவனையில் சேர்த்துள்ளனர். ஆனால் குழந்தையின் உடலில் காயம் இருந்ததால் பார்த்தசாரதியின் குட்டு வெளிப்பட்டு விட்டது. இதையடுத்து மங்கலம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பெண்ணின் கள்ளக்காதலன் பார்த்தசாரதியை கைது செய்தனர்.

குழந்தை பழனிவேல்ராஜனின் பிரேத பரிசோதனை கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. திவ்யாவை பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleமனைவியை பலருக்கு திருமணம் செய்து வைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்த கணவன்!!
Next articleஅண்ணனை வெட்டிக் கொலை செய்து குப்பைமேட்டில் புதைத்த தம்பி!!