தம்பியுடன் தகாத உறவு… மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கொடூரம்.. கணவன் வெறிச்செயல்!!

75

சென்னை எண்ணூர் சத்தியவாணி முத்து நகர் 11வது தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார் (28). இவரும், ராஜலட்சுமி என்ற பெண்ணும் ஆறு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். தற்போது பிரேம்குமார் எண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், பிரேம் குமாரின் தம்பி ரமேஷுடன், ராஜ லட்சுமிக்கு திருமணத்துக்குப் புறம்பான தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது, இதை பிரேம் குமார் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், அந்தப் பழக்கத்தைக் கைவிடாமல் பிரேம் குமாரிடம் ராஜலட்சுமி நாட்டம் காட்டியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ராஜலட்சுமி எண்ணூர் சத்தியவாணி முத்துநகர் 18வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த கணவர் பிரேம்குமார், குடிபோதையில் வைத்திருந்த கத்தியால் ராஜலட்சுமியின் கழுத்து, தலை மற்றும் விலா எலும்புகளில் சரமாரியாக குத்தினார்.

இதில் பலத்த காயம் அடைந்த ராஜலட்சுமி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த எண்ணூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பி ஓடிய பிரேம்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Previous article5 வயது குழந்தையை தவிக்கவிட்டு காதலனுடன் தற்கொலை செய்த இளம்பெண்… வாட்ஸ் அப் மெசேஜால் பரபரப்பு!!
Next articleரயிலில் ஆபாச நடனம்… வைரலாகும் இளம்பெண்ணின் வீடியோ… கடுப்பான பயணிகள்!!