காதலனுடன் இளம்பெண் காவல் நிலையத்தில் தஞ்சம்… கடன் கேட்ட இடத்தில் மலர்ந்த காதல்!!

56

கடன் கேட்டு நிதி நிறுவனத்திற்கு சென்ற போது, காதல் வயப்பட்டு காதலனுடன் காவல் நிலையத்தில் இளம்பெண் தஞ்சமடைந்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பெருமகளூர் பகுதியில் வசித்து வருபவர் அனுஷ்வர்யா (24). இவர் எம்பிஏ பட்டதாரி.

இவர் மகேஷ்குமார் (33) என்பவரை காதலித்து வருகிறார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் பேராவூரணி பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். அனுஷ்வர்யா கடனுக்காக இந்த நிதி நிறுவனத்திற்கு சென்றார்.

அப்போது மகேஷ் குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர், இந்த விஷயம் இரு தரப்பு பெற்றோருக்கும் தெரிய வந்ததும், பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இருவரும் வேடசந்தூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இருவரது வீட்டாரையும் போலீசார் அங்கு வரவழைத்தனர். அப்போது அவர்களை ​​அழைத்துச் செல்வதாக வாலிபரின் பெற்றோர் தெரிவித்தனர். அதன் பிறகு பெண்ணின் பெற்றோர்கள் எங்களுக்கும் மகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

அவர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டோம் என்று எழுதி கொடுத்தனர். பின்னர் காதல் ஜோடியை இளைஞரின் வீட்டார் அழைத்து சென்றனர்.

Previous articleஎங்க அம்மாவையே கிண்டல் பண்றியா? ஆத்திரத்தில் கேலி செய்தவனை காலி செய்த மகன்!!
Next articleராணுவ வீரர் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை!!