தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி!!

51

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் மழை பெய்து வந்தாலும் தண்ணீர் பிரச்சனை இன்னும் தீராமலேயே இருந்து வருகிறது. பெங்களூர் நகர் முழுவதும் பல பகுதிகளுக்கு இன்னமும் தண்ணீர் லாரிகள் மூலமாக விநியோகிக்கப்பட்டு வரப்படுகிறது.

இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த அக்கா, தம்பி மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே தொட்டா நாகமங்கலாவைச் சேர்ந்தவர் மதுமிதா(20). பெங்களூரு எஸ்எஸ்எம்ஆர்வி கல்லூரியில் படித்து வந்த மதுமிதா தனது தம்பி ரஞ்சனை(18) கல்லூரியில் விட்டுவிடக் கூறி அழைத்துள்ளார்.

இருவரும் ஒன்றாக கிளம்பிய நிலையில், தனது தம்பியைப் பின்னால் அமர வைத்துக் கொண்டு வண்டியை மதுமிதா ஓட்டிச் சென்றார். அப்போது வேகமாக வந்த தண்ணீர் டேங்கர் லாரி மதுமிதா ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில் கீழே விழுந்த இருவர் மீதும் லாரிச் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி மதுமிதாவும், ரஞ்சனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதுமிதா, ரஞ்சன் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில், இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த மதுமிதா, ரஞ்சன் ஆகிய இருவர் மீதும் வேகமாக மோதி லாரி விபத்து ஏற்படுத்திய காட்சி பதிவாகியிருந்தது. விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

Previous articleராணுவ வீரர் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை!!
Next articleமனைவியின் கல்வி கடனை அடைக்க வெளிநாடு சென்ற வாலிபர் : இன்ஸ்டா காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி!!