பெற்ற தந்தையே 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரம்!!

49

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றவியல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சின்னஞ்சிறு குழந்தை தொடங்கி மூத்தவல் வரை பெண்களை யாரை நம்பியும் சிறிது நேரம் கூட விட்டுச்செல்ல முடிவதில்லை.

அந்த வகையில் உத்திரப்பிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹரில் பெற்ற மகளை தந்தை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கசாப்புக் கடை நடத்தி வருபவர் சமன் சிங் . இவரது மனைவி வெளியூர் சென்றிருந்ததால் இவரும் மகளும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

இவர் தனது 16 வயது மகளை பலாத்காரம் செய்துள்ளார். சமன்சிங் தனது 16 வயது மகளை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். தாய் வீட்டிற்கு திரும்பிய நிலையில் சிறுமி நடந்ததை தனது தாயிடம் கூறியுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த தாய் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சமன்சிங்கை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதே நேரத்தில் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleபல முறை பலாத்காரம் வீடியோ எடுத்து மிரட்டிய காதலன் மீது காதலி புகார்!!
Next articleதோழியின் குழந்தையை தன்னுடைய குழந்தை என வளர்த்த இளம்பெண்.. அதிர்ச்சிப் பின்னணி!!